காங்கிரஸ் கட்சிக்கு அடிமை மாதிரி இருந்தேன்: முன்னாள் முதல்வர் குமாரசாமி

சமீபத்தில் கர்நாடகாவில் ஆட்சியை இழந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது ‘காங்கிரஸ் கட்சிக்கு அடிமை போல பணியாற்றினேன் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் நான் முழு சுதந்திரம் அளித்தேன். மாநகராட்சி மேயர்களுக்கு கூட நான் முழு சுதந்திரம் அளித்து இருந்தேன். கடந்த 14 மாதங்களாக இந்த எம்.எல்.ஏக்களுக்கும், எங்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் அடிமை போல பணியாற்றினேன். பிறகு ஏன் அவர்கள் என்னை குற்றம் சாட்டுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதிகளில் ஏதேனும் கோரிக்கையுடன் என்னைத்தேடி வந்தால், உடனடியாக அதை நிறைவேற்றி கொடுத்தேன். உரிய அனுமதி கூட பெறாமல் என்னை எம்.எல்.ஏக்கள் சந்திப்பதை வழக்கமாக கொண்டு இருந்தனர். கடந்த காங்கிரஸ் அரசு செயலாற்றாத நிலையில், நான் உடனுக்குடன் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்தேன். முதல் மந்திரி பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், நான் தற்போது மகிழ்ச்சி மிக்க நபராக உள்ளேன். இன்றைய அரசியல் நல்லவர்களுக்கானதாக இல்லை. வெறுப்பு,சாதி சார்ந்த அரசியல் தற்போது உள்ளது”

Leave a Reply