தெலுங்கானாவில் பரபரப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெலுங்கானா கவர்னராக நியமனம் செய்யப்பட்டார்

இதனை அடுத்து கவர்னர் தமிழிசிஅ அவர்கள் தெலுங்கானா அரசுடன் இணக்கமாக பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் திடீரென தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு நடவடிக்கையில் தெலுங்கானா அரசு மெத்தனமாக இருப்பதாக பேட்டி ஒன்றில் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்துவதில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அரசு மெத்தனமாக செயல்படுவதாகவும், இது குறித்து அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும் எந்த பலனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே புதுமையில் முதல்வர் மற்றும் கவர்னர் பிரச்சனை தொடர்கதையாகி வரும் நிலையில் தற்போது தெலுங்கானாவிலும் அதே நிலை ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே பரவியுள்ளது தமிழிசையின் இந்த பேட்டிக்கு முதல்வர் தரப்பில் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது

Leave a Reply