களத்தில் மக்களின் முதல்வர். கம்பளத்தில் ஆளுநர்.
புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மக்களின் திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறது. இருப்பினும் அம்மாநில ஆளுனர் அரசுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மக்கள் திட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் நாராயணசாமி கையில் மம்பட்டியுடன் களத்தில் இறங்கி வேலை பார்க்க, அதனை ஆளுனர் கிரண்பேடிஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தார். அதுமட்டுமின்றி அவர் நிற்கும்போது அவரது காலில் மண் படக்கூடாது என்பதற்காக பேப்பர் மேல் நின்றிருந்தார்.
களத்தில் மக்களின் முதல்வர் மண்ணில் கால் வைத்து பணிசெய்யும்போது, கம்பளத்தில் ஆளுநர் நிற்பதை அப்பகுதி மக்கள் அதிருப்தியுடன் பார்த்தனர்.
களத்தில் மக்களின் முதல்வர்.
கம்பளத்தில் ஆளுநர்.ஆளுநர் பதவி ஒரமாக நிற்க, வேடிக்கை பார்க,நல்ல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட…..@VNarayanasami @INCPuducherry @INCTamilNadu @TN_PYC @khushsundar @JAslamBasha @jothims @K_T_L pic.twitter.com/K22z8VTUtd
— Congress for TamilNadu (@CongressForTN) October 13, 2018
Leave a Reply
You must be logged in to post a comment.