கல்வி அமைச்சரின் நெகிழ்ச்சியான வேண்டுகோள்! முன்னாள் மாணவர்கள் செவிமடுப்பார்களா?

அரசு பள்ளிகளில் படித்து உன்னத நிலைக்கு உயர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அரசு பள்ளிகளில் படித்து உன்னத நிலைக்கு உயர்ந்துள்ள முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியை உயர்த்த முன்வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நெகிழ்ச்ச்சியான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். மேலும் அரசு பள்ளியை தத்தெடுக்க விரும்பும் நிறுவனங்களுக்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த வேண்டுகோளை செவிமடுத்து அரசுப்பள்ளிகளின் தரம் உயர முன்னாள் மாணவர்கள் முன்வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது

Leave a Reply