கல்லூரி மாணவர்களுக்கு கவுன்சிலிங்: காவல்துறை உயரதிகாரிகள் முடிவு

சென்னையில் ஒரு சில கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது வன்முறையில் ஈடுபட்டு வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் ஒரு மாணவரை அருவாள் மட்டும் கத்தியால் ஓட ஓட விரட்டி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து சென்னையில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களை காவல்துறை உயர் அதிகாரிகள் சந்திக்க உள்ளனர்

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர்களை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் சந்தித்து ஆலோசனை வழங்க உள்ளார்

அதேபோல் நந்தனம் கல்லூரி மாணவர்களுடன் அடையாறு துணை ஆணையர் தகவல் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். இதேபோல் ஒவ்வொரு கல்லூரிக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆலோசனை வழங்க வழங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply