கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கர்நாடகாவில் 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை அடுத்து இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு சென்றது. 15 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்க சபாநாயகருக்கு காலக்கெடு விடுவிக்க முடியாது என்றும், கர்நாடக அரசு எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகரே முடிவு எடுக்கலாம் என்றும் எம்எல்ஏக்கள் 15 பேர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது

மேலும் சபாநாயகருக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சபாநாயகரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அம்மாநில அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Leave a Reply