கர்நாடக அணைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு வரவேண்டும்: அதிமுக எம்பி வலியுறுத்தல்

கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகளின் முழு கட்டுப்பாட்டையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என அதிமுக மாநிலங்களவை எம்பி விஜிலா சத்யானந்த் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கோதாவரி நதியை காவிரியுடன் இணைக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்தவும் விஜிலா சத்யானந்த் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் வலியுறுதியுள்ளார்.

 

Leave a Reply