முழுவதும் கரையை கடந்தது ‘நிவர்’ புயல் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

‘நிவர்’ புயல் தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடந்தது என்றும், புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 முதல் 2.30 மணி வரை முழுவதுமாக கரையை கடந்துள்ளது என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் புயல் கரையை கடக்கும்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் தனது நன்றி என்றும், முதல்வரின் ஆணைப்படி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

புயல் குறித்த சேதங்கள் இனி கணக்கிடப்படும் என்றும் நிவாரணப்பணிகள் முடுக்கிவிடப்படும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply