கருணை அடிப்படையில் அரசு பணி பெற புதிய நிபந்தனை: அரசாணை வெளியீடு

அரசு ஊழியர் ஒருவர் பணியின்போது இறந்துவிட்டால் கருணை அடிப்படையில் இறந்தவரின் வாரிசுகளுக்கு அரசு வேலை கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கருணை அடிப்படையில் அரசு பணி பெற குறைந்தபட்ச வயது 18 இருக்க வேண்டும் என்றும், அதிகபட்ச வயது 50 வயது இருக்கவேண்டும் என்றும் வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

அதுமட்டுமின்றி அரசு ஊழியர் இரண்டு ஆண்டுகளுக்குள் பணி பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணைப்படி கருணை அடிப்படையில் வேலை பெறுபவர்கள் பின்பற்றவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply