கருணாநிதியின் விசுவாசிகள் என் பக்கம்: அழகிரி ஆரம்பிக்கும் பிரச்சனை
திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவிற்கு பின் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி இடையே திமுகவில் பங்காளி சண்டை வரும் என்று ஏற்கனவே அரசியல் விமர்சகர்கள் ஊகித்திருந்த நிலையில் தற்போது அது வெளியே தெரிய தொடங்கிவிட்டது.
இன்று தனது குடும்பத்தினர்களுடன் கருணாநிதியின் நினைவகம் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தன் பக்கம் இருப்பதாகவும், தனது ஆதங்கம் குடும்பத்தை பற்றியதல்ல என்றும், திமுக என்ற கட்சியை பற்றியது என்றும் கூறினார். மேலும் தாம் தற்போது தி.மு.க.வில் இல்லை என்பதால் நாளை கூடவிருக்கும் செயற்குழு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் மு.க.அஅழகிரி கூறினார்.
எனவே அதிமுகவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மறைந்த பின்னர் ஏற்பட்ட குழப்பம், திமுகவிலும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாள் கழித்து அழகிரி எடுக்கவிருக்கும் நடவடிக்கையை பொருத்தே திமுகவின் எதிர்காலம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.