கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்: கண்ணீர் விட்ட ஸ்டாலின் – துரைமுருகன்
இன்று காலை தமிழக சட்டமன்றம் கூடியவுடன் சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கான இரங்கல் தீர்மானத்தின் போது எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் கண்ணீர் மல்க பேசினார்.
’பல குடியரசுத்தலைவர்களை உருவாக்கியவர் கலைஞர் என்றும் எனக்கு இரண்டாவது உயிரை கொடுத்தவர் என்றும், என்னை தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்தவர் அவர் என்றும் கூறினார்.
மேலும் கடந்த 2007-ல் எனக்கு அறுவை சிகிச்சை நடந்தபோது, என் அறையிலேயே இருந்து கருணாநிதி என்னை பார்த்துக்கொண்டார் என்று துரைமுருகன் உருக்கமாக கூறி கண்ணீர் விட்டார். அப்போது அருகில் இருந்த மு.க.ஸ்டாலினும் கண்ணீருடன் அவருக்கு ஆறுதல் கூறி அவரை அமர செய்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.