கமல் கட்சியுடன் இனி கூட்டணி இல்லை: செ.கு.தமிழரசன்

‘மக்கள் நீதி மய்யம் உடனான கூட்டணி முடிந்துவிட்டது’ என்றும், இனி அந்த கட்சியுடன் கூட்டணி இல்லை இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவர் செ.கு. தமிழரசன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு மாற்றாகவே, மக்கள் நீதி மைய்யத்துடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தாகவும் தற்போது, அந்த கூட்டணி முடிந்து விட்டதாகவும் கூறினார்.

வரும் உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது வரும் காலங்களில் தெரியும் என்றும் செ.கு. தமிழரசன் தெரிவித்தார்.

Leave a Reply