கமல்ஹாசன் கூறியதில் எந்த தவறும் இல்லை: வைகோ
கோட்சே தொடர்பாக கமல்ஹாசன் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் நாதுராம் கோட்சே என்றும் கமல்ஹாசன் பேசிய பேச்சுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஒருசில அரசியல் தலைவர்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிட கழக தலைவர் கி.வீரமணி உள்பட ஒருசிலர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.