மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் காரை மர்ம நபர் ஒருவர் உடைக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கமல்ஹாசன் அவர்கள் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் நேற்று அவர் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு மர்ம ஆசாமி அவருடைய கார் கண்ணாடியை உடைக்க முயன்றார்

ஆனால் அங்கிருந்த மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் அதனை தடுத்து அந்த நபரை போலீஸார் ஒப்படைத்தனர். அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் கமல்ஹாசனின் கார் கண்ணாடியை உடைக்க முயன்ற தாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

Leave a Reply