கமலுக்கு உதவி செய்வாரா பிரசாந்த் கிஷோர்?

குஜராத்தில் நரேந்திரமோடியையும், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியையும் தனது தேர்தல் வியூகத்தால் முதல்வராக்கிய பிரசாந்த் கிஷோர் நேற்று கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க அவர் உதவி செய்வார் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஒரு தொகுதியில் கூட மக்களவை தேர்தலில் வெற்றி பெறாத ஒரு கட்சியை எப்படி பிரசாந்த் கிஷோர் ஆளும் கட்சியாக மாற்றுவார் என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் ரஜினி உள்பட ஒருசில கட்சிகளை இணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது

ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இவரை தொடர்பு கொண்டதாகவும் கூறப்படும் நிலையில் கமல் கட்சிக்கு வேலை செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply