shadow

கமர்ஷியலுடன் கூடிய உண்மைச்சம்பவம்தான் ‘தீரன் அத்தியாயம் ஒன்ற்’: சூர்யா

கார்த்தி, ராகுல் ப்ரித்திசிங், நடிப்பில் வினோத் இயக்கிய ‘தீரன் அத்தியாயம் ஒன்று’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் பிரிமியர் காட்சி நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த காட்சிக்கு சூர்யா, கார்த்தி உள்பட பலர் வருகை தந்திருந்தனர். படம் முடிந்த பின்னர் சூர்யா கூறியதாவது:

தீரன் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காவல்துறை அதிகாரிகள் வாழ்நாளில் காணப்படும் வழக்குகளை வைத்து எடுக்கப்பட்ட படம். எவ்வளவுதான் கற்பனை செய்தாலும் உண்மை சம்பவம் நம்மை பிரமிக்க வைக்கும்.

தமிழ் நாட்டில் 10வருடமாக கண்டு பிடிக்க முடியாத ஒரு வழக்கை இருபது காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதே இப்படத்தின் கதை. இயக்குநர் வினோத்தின் எழுத்தும், இயக்கமும் சதுரங்க வேட்டையில் எப்படி பேசப்பட்டதோ அதே போல் இதிலும் பேசப்படும்.

ஜிப்ரானின் இசை அருமையாக உள்ளது. சத்யாவின் ஒளிப்பதிவு முழுமையாக பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தின் மூலமாக அதிக விஷயங்கள் வெளியில் தெரிகிறது. ஒரு காவல் துறை அதிகாரி வாழ்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை இதன் மூலம் அறியலாம். உண்மையான சம்பவத்தோடு சேர்த்து கமர்ஷியல் படம் எடுத்துள்ளார்கள்’ என்று கூறினார்

Leave a Reply