கன்னியாகுமரி: விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல திடீர் தடை
கன்னியாகுமரியில் உள்ள கடலில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று விவேகானந்தர் மண்டபம். ஃபனி புயல் காரணமாக இன்று காலை முதல் கன்னியாகுமரியில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் கடலில் அலையின் சீற்றம் அதிகரித்துள்ளதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல்சீற்றம் குறைந்தவுடன் இந்த தடை நீக்கப்படும் என தெரிகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.