shadow

கன்னியாகுமரியில் ரூ.1 கோடியில் மணிமண்டபம்! யாருக்கு தெரியுமா?

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார்

நேற்று ஒசூர், நாகர்கோவில் ஆகிய இரண்டு மாநகராட்சிகள் குறித்த அறிவிப்புகள் வெளிவந்த நிலையில் இன்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரியில் ரூ.1 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும், பேரரசர் முத்திரையருக்கு திருச்சியில் ரூ.1 கோடியில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தமிழறிஞர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.,

Leave a Reply