shadow

கனிமொழி, ராசா உள்பட அனைவரும் விடுதலை: 2ஜி வழக்கில் நீதிபதி தீர்ப்பு

இந்தியாவின் முக்கிய வழக்காக கருதப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் இந்த வழக்கின் தீர்ப்பை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒபிசைனி வாசித்தார்.

இதன்படி இந்த வழக்கின் தீர்ப்பின் சாரம்சமாக குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அவர் தீர்ப்பளித்தார்

இந்த தீர்ப்பால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சென்னை அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த தீர்ப்பால் நடைபெற்று வரும் ஆர்.கே.நகர் தேர்தலில் திமுகவுக்கு விழும் வாக்குகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply