கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறையா?

ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதி, இதுகுறித்த அறிவிப்புக்கு பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இன்னும் சில நிமிடங்களில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் இந்த ஆறு மாவட்டங்கள் தவிர தமிழகத்தின் மற்றா மாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த மழை நவம்பர் 28-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply