கனமழை எதிரொலி: பள்ளிகள் விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17-ம் தேதி முதல் அதாவது நாளை முதல் தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்றும் நேற்று முன்தினமும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது இதனால் சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் கனமழை காரணமாக இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அவர்கள் உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார். இதனையடுத்து இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply