shadow

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை

கனமழை காரணமாக நேற்று தமிழகத்தில் எட்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்றும் மழை தொடர்வதால் இன்று சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி,தேனி, விழுப்புரம், மதுரை, காஞ்சிபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மட்டும் கல்லூரிகளும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகள் நிரம்பி வழியும் வாய்ப்பு இருப்பதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply