கனமழை எச்சரிக்கை: 12 மாவட்டங்களில் நாளை விடுமுறையா?

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இந்த 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், அடுத்த 48 மணி நேரத்தில் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

Leave a Reply