கனமழையால் இன்றும் 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நல்ல
மழை பெய்து வரும் நிலையில் நேற்றும், நேற்று முன் தினமும் ஒருசில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது

இந்த நிலையில் இன்றும் தமிழகத்தின் 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், புதுவையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் விபரங்கள்:

ராமநாதபுரம் மாவட்டம்: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தூத்துகுடி மாவட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
நீலகிரி மாவட்டம்: குந்தா, குன்னூர், கோத்தகிரி ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை

Leave a Reply