shadow

கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலி அசோக்குமார் மரணமாக இருக்கட்டும்- விஷால்

கந்துவட்டி கொடுமையால் தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்த பின்னர், சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் தயாரிப்பாளர்களை மீட்டெடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பும், ஆதரவும் அளித்து வருவதாக கூறியுள்ளார். கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள், சங்கத்தை அணுகினால், அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்படும் என்று விஷால் உறுதியளித்துள்ளார்.

கந்துவட்டிக் கும்பலுக்கு விரைவில் முடிவுகட்டப்படும் என்றும், கந்துவட்டிக் கொடுமைக்கு கடைசிப் பலி அசோக்குமார் மரணமாக இருக்கட்டும் எனவும் விஷால் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply