கண்ணதாசனுக்காக கமல் எழுதிய கவிதை!
இன்று கவிஞர் கண்ணதாசனின் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன், கண்ணதாசனுக்காக ஒரு கவிதையை எழுதி அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த கவிதை பின்வருமாறு:”
செப்பிடும் நற்றமிழை
செவிவழி எனக்கீந்த
செவிலித்தாய்
முத்தைய்ய மாமணி
பிந்தைய காலத்தில்
பாடவந்தோர் பற்றிய பாட்டை
பாட்டுடைத் தலைவன் எனினும்
கண்ணனுக்கு தாசன்
பிறந்து வந்து பாடியதால்
இறந்ததை மன்னித்து
இனியென்றும் இறவாதும்
புகழையும் தமிழையும்
போற்றிடும் தமிழ்
செப்பிடும் நற்றமிழை
செவிவழி எனக்கீந்த
செவிலித்தாய்
முத்தைய்ய மாமணி
பிந்தைய காலத்தில்
பாடவந்தோர் பற்றிய பாட்டை
பாட்டுடைத் தலைவன் எனினும்
கண்ணனுக்கு தாசன்
பிறந்து வந்து பாடியதால்
இறந்ததை மன்னித்து
இனியென்றும் இறவாதும்
புகழையும் தமிழையும்
போற்றிடும் தமிழ்.— Kamal Haasan (@ikamalhaasan) June 24, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.