கட் அவுட், பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன்: முக ஸ்டாலின்

சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் வைத்த பேனர் கீழே விழுந்ததால் பலியான நிலையில் இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையின்போது அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை மதிப்பில்லை என்று நீதிபதிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்

இந்த நிலையில் இனிமேல் திமுக நிகழ்ச்சிக்காக யாரும் கட் – அவுட், பிளக்ஸ் வைக்கக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் கட்–அவுட் வைக்கப்படும் கூட்டங்களிலோ, நிகழ்ச்சிகளிலோ நான் கலந்துகொள்ளமாட்டேன் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல் அனைத்து கட்சி தலைவர்களும் உறுதியாக கூறினால் இந்த பேனர் கலாச்சாரம் ஒழிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

Leave a Reply