shadow

கட் அவுட்டுக்கு பால்: மீண்டும் மாற்றி பேசும் சிம்பு

நடிகர் சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் முதலில் தனது ரசிகர்கள் யாரும் கட் அவுட்டுக்கு பால் ஊற்ற வேண்டாம், அந்த காசில் அப்பா, அம்மாவுக்கு வேட்டி, சேலை வாங்கி கொடுங்கள் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் திடீரென கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பாலூற்றுங்கள் என்ற சர்ச்சை கருத்து ஒன்றை கூறினார். தற்போது மீண்டும் தனது கருத்தை மாற்றியுள்ளார். அண்டாவில் பால் காய்ச்சி மக்களுக்கு கொடுக்க சொன்னேன் என்றும் கட் அவுட்டுக்கு ஊற்ற சொல்லவில்லை என்றும் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். பால் அபிஷேகம் பற்றி நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் எனது ரசிகர்களை எனது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யுமாறு சொல்லவில்லை என்றும், அவ்வாறு பேசியது தவறாக இருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என்றும் சிம்பு தெரிவித்துள்ளார்.

Leave a Reply