கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் தீ: 30க்கும் மேற்பட்டோர் காயம்
மத்திய போர்ச்சுகல் பகுதியில் உள்ள காட்டு பகுதியில், கட்டுக்கடங்காமல் தீ பற்றி எரிந்து வருகிறது. 1000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை அணைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தீ வேகமாக அப்பகுதியில் பரவி வருவதால், மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இதில் ஒருவர் அதி தீவிர காயங்களுடன் உயிருக்கு போராடி வரும் நிலையில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்களும், 7 தீயணைப்பு வீரர்களும் தீயால் காயமடைந்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.