கட்சியை விட்டு நீக்கினாலும் அதிமுக தொண்டராகவே தொடருவோம் என அதிமுக பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊரிலேயே இல்லாத போது அதிமுகவுக்கு எதிராக நாங்கள் எப்படி செயல்பட முடியும்..? என்ற கேள்வியையும் சத்யா பன்னீர்செல்வம் எழுப்பியுள்ளார்.

எங்களை அழைத்து விசாரிக்காமல் கட்சியை விட்டு நீக்கியதால் ஈ.பி.எஸ். மீது எங்களுக்கு மன வருத்தம் என்றும் சத்யா பன்னீர்செல்வம் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply