நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி சென்னையை அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது

நேற்றுவரை கடைசி இடத்திலிருந்த ராஜஸ்தான் அணி நேற்றைய ஒரே வெற்றியின் மூலம் 5வது இடத்துக்கு முன்னேறியது

அதேபோல் நேற்று ஏழாவது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி 8வது இடத்திற்கு தள்ளப்பட்டது
10 போட்டிகளில் விளையாடி 7 தோல்விகளை பெற்றுள்ள சிஎஸ்கே, இனி மீண்டு வர வாய்ப்பே இல்லை என்பது ஒரு சோகமான தகவல் ஆகும்

ஆனால் அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளதால் இன்னும் ஒரே ஒரு போட்டியில் வென்றாலும் கூட அது பிளே ஆப் சுற்றில் செல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை அணி முதல் முறையாக பிளே ஆப் சுற்றில் கூட நுழைய முடியாத நிலையில் இந்த ஆண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply