கடன் சுமையில் இருந்து விடுபட மலேசிய பாதையை கடைபிடிக்கின்றோம்: இம்ரான்கன்
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற இம்ரான்கான் இருநாள் அரசுமுறை பயணமாக மலேசியாவுக்கு இன்று சென்றுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நகரில் அந்நாட்டின் பிரதமர் மஹதிர் முஹம்மதுவை சந்தித்துப் பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
மலேசியா போலவே ஊழல் ஒழிப்பை மையப்படுத்தி நானும் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறேன். கடன் சுமையில் இருந்து பாகிஸ்தானை விடுவிப்பதற்காக மலேசியாவின் முன்னேற்றப் பாதையை நாங்கள் கடைபிடித்து வருகிறோம்
மலேசியா பிரதமராக மஹதிர் முஹம்மது அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் தனிநபர் வருமானம், உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கச் செய்து, இந்நாட்டை பொருளாதார ரீதியாகவும், முன்னேற்றிய அவரது அனுபவத்தின் மூலமாக அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று இம்ரான்கான் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.