கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கொடுத்த ரஜினிகாந்த்
கடந்த ஆண்டு டெல்டா மாவட்டத்தில் வீசிய கஜா புயலால் அந்த பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இந்த புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசும், தனியார் அமைப்புகளும் பெரும் உதவிகள் செய்தன.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடுகளை கட்டு தருவதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதி அளித்திருந்தார். அதன்படி தற்போது அந்த வீடுகள் தயாராக்வீட்ட நிலையில் வீடுகளை இழந்த அந்த 10 பேரையும் சென்னை போயஸ் இல்லத்திற்கு அழைத்து வீட்டிற்கான சாவியை வழங்கினார் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் அவர்களிடம் இருந்து வீட்டுச்சாவியை வழங்கிய அந்த பத்து குடும்பத்தினர்களும் ரஜினிகாந்த் அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.