shadow

கஜா நிவாரண பொருட்கள்: ரயில்வே துறை புதிய சலுகை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும், இந்தியாவில் இருந்து நிவாரண பொருட்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல கட்டண சலுகை அல்லது இலவசமாக கொண்டு செல்ல அனுமதிக்க வெண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கைகள் எழுந்தது இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல ரயிலில் சரக்கு கட்டணம் இல்லை என்றும், தமிழகத்திற்குள்ளும் பிற மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதி வரை கட்டண விலக்கு அளிக்கப்பட்டுவதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Leave a Reply