ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வீட்டில் திருடிய திருடனுக்கு கால் எலும்பு முறிவு!

கடந்த சில மாதங்களாக சமூக விரோத செயல்கள் செய்பவர்கள் போலீசில் சிக்கினால் அடுத்த நாள் அவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையில் அல்லது காலில் கட்டு போட்டபடி புகைப்படங்கள் வெளியாகின்றது

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ஓய்வு பெற்ற எஸ் ஐ வீட்டில் திருடிய ஒரு நபருக்கு கால் எலும்பு முறிந்துள்ளது.

இந்த திருடன் மிளகாய் பொடி தூவி நகைகளை திருடியதாகவும், அப்போது வீட்டின் உரிமையாளர் வந்ததால் திருடன் தப்பியோடும் போது, சுவரேறி குதித்ததில் கால் உடைந்ததாகவும் கூறப்படுகிறது இதையடுத்து பொதுமக்கள் பிடித்து அத்திருடனை போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த விசாரணையில் அந்த திருடன் காலசமுத்திரம் கிராமத்தை சதீஷ் என்பது தெரிய வந்தது. காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட சதீஷை போலீசார் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply