ஓபிஎஸ் மகன் கல்வெட்டு விவகாரத்தில் முன்னாள் காவலர் மீது வழக்குப்பதிவு
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். தேர்தல் முடிவடைந்து இன்னும் வாக்குகள் எண்ணும் முன்பே அவரது பெயர் கோவில் கல்வெட்டு ஒன்றில் எம்பி என குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கல்வெட்டு விவகாரத்தில் முன்னாள் காவலர் வேல்முருகன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் புகாரின் பேரில் 3 பிரிவுகளில் சின்னமனூர் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.