ஓபிஎஸ்க்கு மாறிய அமைச்சர் செங்கோட்டையனின் பதவி: அதிமுகவில் பரபரப்பு
தமிழக சட்டமன்றாம் வரும் 8ஆம் தேதி கூடவிருப்பதால் அரசியல் கட்சிகள் இதற்கு தயாராகி வருகின்றன. ஆளும் அதிமுக ஆட்சிக்கு எதிர்க்கட்சியான திமுக மட்டுமின்றி தற்போது தினகரனும் சட்டமன்றத்தில் இருப்பதால் இரட்டை தலைவலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சட்டமன்ற அதிமுக அவை முன்னவராக இருந்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு பதிலாக சட்டப்பேரவை அவை முன்னவராக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளை சமாளிக்கவே இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது.
இருப்பினும் அமைச்சர் செங்கோட்டையனுக்கு இருந்த பொறுப்பு ஓபிஎஸ் அவர்களுக்கு மாற்றப்பட்டுள்ளதால் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படுவதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.