ஓட்டு போடும் நாளில் புலம்ப வேண்டாம்: இன்றே இதனை செய்யுங்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் தேர்தல் நாளில் பலர் ஓட்டு போடும் வாய்ப்பை இழந்தனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் பலர் வாக்குவாதம் செய்வதும் உண்டு

ஆனால் பெரும்பாலானோர் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கின்றதா? என்பதை சரிபார்ப்பதில்லை. இதனால்தான் இந்த பிரச்சனை வருகின்றது

இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் இணையதளம் மூலம் பெயர் சேர்க்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு செய்துள்ளது. இதனையடுத்து ஒவ்வொருவரும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என சரிபார்த்து கொள்ளுங்கள். பெயர் இல்லை என்றால் உடனே பெயரை சேர்க்க ஆன்லைனிலேயே விண்ணப்பம் செய்யுங்கள். தேர்தலின்போது ஜனநாயக கடமையை ஆற்ற இன்றே இதனை செய்யுங்கள்

 

Leave a Reply