ஓடும் ரயிலை வித்தியாசமாக நிறுத்திய பெண்

சீனாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் ரயிலை காலால் நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது

சீனாவில் உள்ள கவுங்சூவ் என்ற இடத்திலுள்ள ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு ரயில் புறப்படத் தயாரானது. அப்போது வேகமாக வந்த பெண் ஒருவர், அலுவலகத்துக்கு நேரமாகி விட்டதாக கூறி உள்ளே விடுமாறு அங்குள்ள அதிகாரிகளை கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் மறுக்கவே, சோதனை செய்யும் கேட்களை கடந்து ரயிலை நோக்கி ஓடியுள்ளார்.

சரியாக ரயில் புறப்படும் போது ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே தனது காலை வைத்து நின்று விட்டார். இதனால் ரயில் புறப்படாமல் அங்கேயே நின்று விட்டது. மிகுந்த சிரமத்திற்கிடையே அதிகாரிகள் அந்த பெண்ணை வெளியே இழுத்து கொண்டு வந்து கைது செய்தனர். விசாரணையில் அலுவலகத்திற்கு தாமதமாக செல்வதை தடுக்கவே இப்படி நடந்துக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply