shadow

ஓசூர் தொகுதி காலி என அறிவிப்பு:

ஓசூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் அமைச்சராகவும் இருந்த பாலகிருஷ்ணரெட்டிக்கு சமீபத்தில் ஒரு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததை அடுத்து அவருடைய எம்.எல்.ஏ பதவியும் அமைச்சர் பதவியும் பறிபோனது. அவரது மேல்முறையீட்டு மனுவிலும் தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த நிலையில் ஓசூர் தொகுதி காலியாகி விட்டதாக சட்டசபை செயலாளர் அறிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தற்போது ஓசூரையும் சேர்த்து தமிழகத்தில் 21 சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ளன.

இந்த 21 தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலோடு இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த தேர்தலின் முடிவு ஆட்சியை மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

 

Leave a Reply