ஓசி பிரியாணி பிரச்சனை: ஒழுங்கு நடவடிக்கை எடுத்த ஸ்டாலின்
சென்னை ஓட்டல் ஒன்று மூடும் நேரத்தில் பிரியாணி கேட்டு கடை ஊழியர்களை திமுக பிரமுகர் தாக்கிய விவகாரம் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் அனைத்தும் கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இது தொடர்பாக கடை நிர்வாகம் காவல் துறையில் புகார் அளிக்க, விசாரணையில், விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகி யுவராஜ் என்பவர்தான் ஊழியர்களை தாக்கியவர் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, யுவராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், யுவராஜும், அவரின் உடன் வந்தவர்களும் தலைமறைவாகி விட்டனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். யுவராஜ் மற்றும் அவருடன் இருந்த திமுக பிரமுகர்களை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர் ஸ்டாலின்.
Leave a Reply
You must be logged in to post a comment.