நீட் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது

இந்த குளறுபடிகள் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகளின் அடிப்படையில் ஒருசில அரசியல் தலைவர்கள் கடுமையான அ|றிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து தேசிய தேர்வு முகமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் நீட் தேர்வு முடிவுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது

உண்மையான குறைகள் இருந்தால் அதற்கு கண்டிப்பாக தீர்வு காணப்படும் என்றும் தேர்வு முடிவுகள் மாற்றித் தருவதாக தவறான செய்தி அளிக்கும் நபர்களை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி என வெளியான ஓஎம்ஆர் தாள்கள் அனைத்தும் போலியானவை என்றும் போலியான தகவல் வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது

Leave a Reply