shadow

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவாகும். தேர்தல் கமிஷன் தகவல்

பாராளுமன்றத்திற்கு அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. இந்த திட்டத்திற்கு அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் கூடுதலாக பல லட்சம் எந்திரங்கள் வாங்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு கூடுதலாக மின்னணு எந்திரங்கள் வாங்குவதற்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளார். அதேபோல் தேர்தல் அதிகாரிகளும் அதிக அளவு தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுவாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை 3 தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு புதிய எந்திரங்கள் வாங்க சில ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். மேலும் வரும் ஆண்டுகளில் ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. எனவே மின்னணு எந்திரங்கள் தேவை அதிகரிக்கும். அதற்கும் கூடுதல் செலவாகும்.

2024-ம் ஆண்டு தேர்தலின் போது மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக கூடுதலாக 12 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டியதிருக்கும். அப்போது மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் வாங்குவதற்கே சுமார் ரூ.14 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று சட்ட ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply