shadow

ஒரே நாளில் மூன்று படங்களின் சென்சார்.

1இந்தியாவிலேயே அதிக திரைப்படங்கள் தயாரிக்கப்படுவது கோலிவுட்டில்தான். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை குறைந்தது நான்கு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மூன்று திரைப்படங்கள் சென்சார் ஆகி, இம்மாத ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய ‘கடவுள் இருக்கான் குமாரு’ திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு ‘யூ’ சர்டிபிகேட் பெற்றுள்ளது. அதேபோல் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா’ படமும் நேற்று செய்யப்பட்டு ‘யூ/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது.

மேலும் தினேஷ் நடித்துள்ள ‘உள்குத்து’ படமும் நேற்று சென்சார் ஆகி ‘யூ’ சான்றிதழ் பெற்றுள்ளது.

‘கடவுள் இருக்கான் குமாரு’ மற்றும் அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் நவம்பர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ‘உள்குத்து’ இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

Leave a Reply