நாடு முழுவதும் ஒரே மாதிரியான அமைப்புகள் இருக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு, ஒரே மொழி, என படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறது

அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஆர்சி புக் மட்டும் ஓட்டுனர் உரிமம் வழங்கும் முறையை கொண்டுவர உள்ளது

வரும் அக்டோபர் 1 முதல் இதனை அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு இதனை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மோட்டார் வாகன விதிமுறையின்படி நாடு முழுவதும் வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் விவரங்கள் அனைத்தும் மின்னணு வடிவத்தில் மாற்றப்பட்டுள்ளதாகவும் ஆர்சி புக், மற்றும் ஓட்டுனர் உரிமை நாடு முழுவதும் ஒரே மாதிரி கொண்டுவரப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அந்த ஓட்டுநர் உரிமத்தில் கியூ ஆர் கோட் மற்றும் சிப் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும் பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்துவதற்கு அளிக்கப்பட்டு வந்த சலுகையும் அக்டோபர் 1 முதல் நிறுத்தப்பட உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply