ஒரு லட்சம் ஃபாலோயர்களுக்கு மேல் உள்ள டுவிட்டர் பயனாளிகளுக்கு எச்சரிக்கை
டுவிட்டரில் ஒரு லட்சம் ஃபாலோயர்களுக்கு மேல் உள்ள கணக்குகளின் உரிமையாளர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசியல் கட்சி தலைவர்கள், அரசு ஊழியர்கள், பிரபலங்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் செயல்பட வேண்டும் என டுவிட்டரில் ஒரு லட்சம் ஃபாலோயர்களுக்கு மேல் உள்ள கணக்குகளின் உரிமையாளர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
அதிக ஃபாலோயர்கள் வைத்திருக்கும் டுவிட்டர் பயனாளிகள் தவறான தகவல்களை அளித்து பிரச்சனையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டுவிட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.