shadow

ஒரு நாளாவது வைகோ போல் வாழ்ந்து காட்டுங்கள்: சத்யராஜ்

மதிமுகவின் முப்பெரும் விழா நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் வைகோ குறித்து மீம்ஸ் போடுபவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

சமூகவலை தளங்களில் வைகோவை பற்றி மீம்ஸ் போடும் இளைஞர்கள், ஒருநாள் வைகோவாக வாழ்ந்து காட்டிவிட்டு அதன் பின்னர் மீம்ஸ் போட வேண்டும் என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே வைகோ குறித்து மிக அதிகமாக மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக வைகோ ஆதரவு கொடுக்கும் கட்சி தேர்தலில் தோல்வி அடைவது குறித்த மீம்ஸ்கள் அதிகம் வலம் வருகின்றன

இதே விழாவில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியபோது, வைகோவின் ஆற்றல், அறிவு, தைரியம் தமிழகத்திற்கு தற்போது தேவையாக உள்ளதாகவும், வைகோவின் தியாகங்கள் வீண் போகாது என்றும் கூறினார்.

Leave a Reply