சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரேணிகுண்டாவுக்கு ஒன்றரை மணி நேரத்தில் செல்லும் வகையில் அதிவேக ரயில் சேவை தொடங்க உள்ளது

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு அரக்கோணம் வழியாக மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது

இன்று பகல் ஒரு மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 24 பெட்டிகளுடன் கிளம்பும் இந்த அதிவேக ரயில் சோதனை ஓட்டமாக செல்லும் என்றும், இந்த ரயில் இரண்டு முப்பது மணிக்கு ரேணிகுண்டாவை சென்றடையும் என்றும் கூறப்படுகிறது

அதேபோல் ரேணிகுண்டாவில் இருந்து இன்று பிற்பகல் மூன்று முப்பது மணிக்கு அதிவேக ரயில் புறப்பட்டு 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது

இந்த ரயில் பயணிகள் பயன்பாட்டுக்கு வந்தால் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply