ஐபிஎல் போட்டியை அடுத்து டி.என்.பி.எல் போட்டி தொடங்கும் தேதி அறிவிப்பு

ஐபிஎல் போலவே கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நடந்து வரும் நிலையில் 4வது டி.என்.பி.எல் போட்டிகள் குறித்த அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

ஜூலை 19ஆம் தேதி ஆரம்பிக்கும் இந்த போட்டிகள் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப்போட்டொ நடைபெறும்.

முன்னதாக ஆகஸ்ட் 18ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 15ஆம் தேதி நடைபெறும் என்றும் இதே போல் முதல் அரையிறுதி போட்டி மற்றும் எலிமினேட்டர் போட்டி ஆகஸ்ட் 11 ம் தேதி திருநெல்வேலியிலும், இரண்டாவது அரையிறுதி போட்டி ஆகஸ்ட் 13 ம் தேதி திண்டுக்கல்லில் நடைபெறும் என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply