ஐநா துணை பொதுச்செயலாளருடன் முக ஸ்டாலின்: திமுகவின் பொய்ப்பிரச்சாரமா?

ஐ.நா முன்னாள் பொது செயலாளர் ஜான் எலியாசன் தனது புத்தகத்தில் முக ஸ்டாலின் குறித்து, ‘நான் வியந்த அரசியல் ஆளுமைகளில் தளபதி ஒருவர். தொடர்ந்து ஒரு மணி நேரம் என்னிடம் மக்கள் பிரச்சனை குறித்து பேசினார். அவரின் நீண்ட கால அரசியல் திட்டங்கள் குறித்த பேச்சுக்களை நானே தனிப்பட்ட முறையில் குறிப்பு எடுத்து அதனை இன்று வரை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். இப்படிப்பட்ட தலைவர் மற்ற நாடுகளிலிருந்து இருந்தால் அவரையும் உலகமே தூக்கி வைத்துக் கொண்டாடி இருக்கும்.

இவ்வாறு ஐநா பொதுச் செயலாளர் திரு ஜான்சன் என்பவர் தனது புத்தகத்தில் எழுதி உள்ளதாக திமுகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றன.ர் ஆனால் இந்த பதிவை ஜான் எலியாசன் மறுத்துள்ளார்

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியபோது இந்த புகைப்படம் போட்டோஷாப் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் இவ்வாறு ஒரு சந்திப்பு நடந்ததாக தனக்கு நினைவில்லை என்றும், மேலும் இந்த புகைப்படத்தில் பல விஷயங்கள் நம்பகத்தன்மையின்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முக ஸ்டாலின் அவர்களே தலையிட்டு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply